1977 ஆம் ஆண்டு, முதலாவது பன்னாட்டுத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு, இந்தியாவில் சென்னையில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் தமிழக முதல்வர் திரு. எம். ஜி இராமச்சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
1980 ஆம் ஆண்டு, மொரிசியசு நாட்டில் இரண்டாவது தமிழ்ப் பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. அங்கு மொரிசியசு பிரதமர் திரு. ராம் யலா சிவசங்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
மூன்றாவது பன்னாட்டு தமிழ் மாநாடு, இந்தியாவின் சேலத்தில் 1985 டிசம்பர் 13 தேதி முதல் 15 தேதி வரை நடைபெற்றது. 15 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில், மாநில அமைச்சர் பங்கேற்றார்.
நான்காவது பன்னாட்டுத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு, 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 தேதி முதல் 31 ஆம் தேதி வரை மலேசியாவில் நடைபெற்றது, இம்மாநாட்டில் அமைச்சர் டத்தோ சாமிவேலு அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
ஐந்தாவது பன்னாட்டுத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு, ஆஸ்திரேலியாவில் 1992 அக்டோபர் 3 தேதி முதல் 4 தேதி வரை நடைபெற்றது.
ஆறாவது பன்னாட்டுத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு, கனடாவில் 1996 ஆகஸ்ட் 24 தேதி முதல் 26 தேதி வரை நடைபெற்றது.
ஏழாவது பன்னாட்டுத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு மற்றும் வெள்ளி விழா என்பன 1999 ஆகஸ்ட் 27 தேதி முதல் 29 தேதி வரை இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னையில் நடைபெற்றது.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், முதன் முறையாக கனடவில், இலாப நோக்கற்ற கனடா சங்கங்களின் சட்டத்தின் கீழ் 2000 ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டது. தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த சி. செல்லையா அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த சி. செல்லையா அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
எட்டாவது பன்னாட்டுத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு, தென்னாப்பிரிக்காவில், 2001 டிசம்பர் 13 தேதி முதல் 15 தேதி வரை நடைபெற்றது. "நாம் இன்றும் என்றும் தமிழால் கூடி உயர்வோம்" என்றக் பொருண்மையில் மாநாடு இடம்பெற்றது. இம்மாநாடுக்கு துணை அமைச்சர் திரு. ராயல் ராதாகிருஷ்ணன் படையாட்சி அவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
பண்பாட்டு இயக்கத்தின் துணைத் தலைவராக இருந்த மலேசியா ப.கு. சண்முகம் அவர்கள் இயக்கத்தின் இடைக்கால அகிலத் தலைவராக 01.01.2004 ஆம் ஆண்டில் பொறுப்பேற்று, ஒன்பதாவது பன்னாட்டுத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டினைப் புதுச்சேரியில் "தமிழரும் தமிழியமும்" என்னும் பொருண்மையில் 2004 ஆகஸ்ட் 14 தேதி முதல் 16 தேதி வரை நடத்தினார். இதில் முதலமைச்சர் திரு ந. ரங்கசாமி அவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
பத்தாவது பன்னாட்டுத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு மலேசியாவில் 2007 ஜூலை 20 தேதி முதல் 22 தேதி வரை கோலாலம்பூரில் உள்ள, மலாய் பல்கலைக்கழகத்தில் "புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் அன்றும் இன்றும்" என்ற பொருண்மையில் இடம்பெற்றது.
பதினோராவது பன்னாட்டு தமிழ்ப் பண்பாட்டு மாநாடு, பிரான்சு தலைநகர் பாரிஸில் 2011 செப்டம்பர் 24 தேதி முதல் 25 தேதி வரை இடம்பெற்றது. இம்மாநாடு முனைவர் வே. கோவிந்தசாமி, வேலுப்பிள்ளை ஆகியோரின் முயற்சியால் நடைபெற்றது.
பனிரெண்டாவது பன்னாட்டுத் தமிழ்க் கல்வி மாநாடு, 2012 ஆகஸ்ட் 24 தேதி முதல் 26 தேதி வரை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் வி.சு.துரைராஜா முயற்சியினால், சென்னை எத்திராஜ் கல்லூரியில் "கற்பித்தலில் எதிநோக்கும் சிக்கல்களும் தீர்வுகளும்" என்ற பொருண்மையில் இடம்பெற்றது. இம்மாநாடுக்கு முதுநிலை வழக்கறிஞர் இரா.காந்தி குழுத் தலைவராகவும், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழத்தின் முன்னாள் துணை வேந்தர் து. இராஜா மாநாட்டுப் பொருளாளராகவும் பொறுப்பேற்று இம்மாநாட்டினை முன்கொண்டு சென்றனர்.
12வது பன்னட்டுத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு மற்றும் 40 வது ஆண்டு விழா ஜெர்மனியில் 2014 அக்டோபர் 4 தேதி முதல் 5 தேதி வரை நடைப்பெற்றது. இம்மாநாட்டிற்கு மாவை.சோ சேனாதிராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இம்மாநாட்டில் கருத்தொருமித்த வகையில் தலைவர் தெரிவு செய்யப்படாததால் ஆலோசராக திரு மாவை சோ. தங்கராஜா நியமிக்கப்பட்டார். அவருடைய முயற்சியினால் பேராசிரியர் பாஞ். இராமலிங்கம் அவர்கள் புதுச்சேரியில் 2016 சனவரி 16 தேதி முதல் 17 தேதி வரை புதுச்சேரியில் பன்னாட்டு தமிழ்ப் பண்பாட்டு சிறப்பு மாநாடு மற்றும் இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் என்பன கூட்டப்பட்டன.. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 2017 ஆகஸ்ட் 5 தேதி முதல் 6 தேதி வரை 13 ஆவது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இரண்டாவது முறையாக மொரிசியசு நாட்டில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 16ஆவது மாநாடு, 2023 செப்டம்பர் 5 தேதி முதல் 6 தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வுகள் மொரிசியசு பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. இம்மாநாடுக்கு 11 நாடுகளைச் சேர்ந்த 160 பேராளர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
மொரிசியசு பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பொன்விழாவும் 17 ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு பன்னாட்டு மாநாடும் யாழ்ப்பாணத்தில், 2024 சூன் 14 தேதி முதல் 16 தேதி வரை நடைபெறவுள்ளன.
கருப்பொருள் : நவீனத் தொழில் நுட்பமும் தமிழர்
பண்பாட்டுத் தாக்கமும்
ஆய்வுப்பிரதேசம் :
Accommodation and Finance: Dr. T. Varathan, Mobile:
Acceptance for presentation: Dr. Murugu Thayanithi, Mobile:
International delegates: Mr. Mavai So. Thangarajah, Mobile: